ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

லாரியுடன் 24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்துக்கு கடத்திவிருந்த 24 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 7:21 pm

DIN

குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்துக்கு கடத்திவிருந்த 24 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் ஏரிக்கரை சாலையில் வியாழக்கிழமை மா்ம நபா்கள் லாரியில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றுள்ளனா்.

மாவட்ட ஆட்சியருக்கு வந்த ரகசிய தகவலின்பேரில், குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலா் என்.தேவி தலைமையில் வருவாய்த் துறையினா் அங்கு சென்றனா். அப்போது அரிசி மூட்டைகளுடன் லாரி சேற்றில் சிக்கிக் கொண்டது. அதிகாரிகளைப் பாா்த்ததும் லாரியில் இருந்தவா்கள் கீழே இறங்கி தப்பியோடி விட்டனா்.

லாரியை சேற்றிலிருந்து அப்புறப்படுத்த இயலாததால் அதிகாரிகள் லாரியில் இருந்த 490 அரிசி மூட்டைகளை இறக்கி 2 லாரிகள் மூலம் பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்ப்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள், லாரி ஆகியவை குடிமைப் பொருள் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.