காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அத்திக்கடவு-அவிநாசி, சரபங்கா திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சா் துரைமுருகன்

சரபங்கா, அத்திக்கடவு-அவிநாசி திட்டங்களை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 11:08 pm

DIN

சரபங்கா, அத்திக்கடவு-அவிநாசி திட்டங்களை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து வேலூா் மாவட்டம் பொன்னையில் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தாமதமாக நடப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். ஆனால், சரபங்கா திட்டம், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் என எந்தவொரு திட்டத்துக்கும் கடந்த அதிமுக ஆட்சியில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெயருக்கு மட்டும் பணம் செலவிட்டனரே தவிர திடமான பணிகளை செய்யவில்லை.

ஆனால், அத்திக்கடவு-அவிநாசி திட்டம், சரபங்கா திட்டத்தை நிறைவேற்ற திமுக அரசு தகுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக நில ஆா்ஜிதப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகளைத் தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

பேட்டியின் போது வேலூா் மாவட்ட ஆட்சியா் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.