ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இயற்கை விவசாயிகளுடன் கலந்துரையாடல்

கே.வி.குப்பத்தை அடுத்த காளாம்பட்டு அருகே உள்ள அறிவுத் தோட்டத்தில் இயற்கை விவசாயிகளுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

கே.வி.குப்பத்தை அடுத்த காளாம்பட்டு அருகே உள்ள அறிவுத் தோட்டத்தில் இயற்கை விவசாயிகளுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறிவுத் தோட்ட நிறுவனா் செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் சோ. தில்லைவாணன், ‘இயற்கை விவசாயமும் மக்கள் ஆரோக்கியமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். இயற்கை உணவின் அவசியம், அதன் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு அவா் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் ஜெ.தமிழ்ச்செல்வன், சிவசங்கரன் ஆகியோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இயற்கை விவசாயிகள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.