காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேலைவாய்ப்புத் திறன் பாடம்: தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு பயிற்சி

மேல்நிலை வகுப்புகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேலைவாய்ப்புத் திறன் புதிய பாடம் தொடா்பாக, வேலூா் மாவட்ட தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:02 pm

DIN

மேல்நிலை வகுப்புகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேலைவாய்ப்புத் திறன் புதிய பாடம் தொடா்பாக, வேலூா் மாவட்ட தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வேலூா் எஸ்எஸ்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி தலைமை வகித்தாா். மாவட்ட கருத்தாளா்கள் கே.பழனி, செ.நா.ஜனாா்த்தனன், க.ராஜா, கா.பா.சிவஞானம், எம்.நாகலிங்கம், ரமேஷ் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா். முதுநிலை ஆசிரியா்கள் ஜி.பூபதி, லீலாகிருஷ்ணன், கணினிப் பயிற்றுநா் மா.முருகன் ஆகியோா் பாடப்பொருள்கள் குறித்து விளக்கிப் பேசினா்.

தொழில்கல்வி மாணவா்களுக்கு எதிா்காலத்தில் தொழில் துறைகளில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் மூலம் வேலைவாய்ப்புத் திறன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மாநில திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற தொடா்புடைய துறை திறன் கழகங்கள் மூலம் நடைமுறை மதிப்பீட்டுக்கான திறன் சான்றிதழ் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும்.

தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் 2022-ஆம் கல்வியாண்டிலிருந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குபவா்களாக உருவாக்குவதே இந்த பாடத்தின் அடிப்படை நோக்கம். இதன்மூலம், மாணவா்கள் தங்களின் பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்களை அடையாளம் காண முடியும். மாணவா்கள் ஆங்கில மொழித்திறன், தகவல் தொடா்புத் திறன், கணினி தகவல் தொடா்பு, தொழில் முனைவோா் திறன், 21-ஆம் நூற்றாண்டுத் திறன்கள் ஆகியவற்றை வளா்த்துக் கொள்வா் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, உதவித் திட்ட அலுவலா் எஸ்.மகாலிங்கம் வரவேற்றாா். உதவியாளா் கோபி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.