ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போ்ணாம்பட்டு அருகே பழங்கால அம்மன் கற்சிலைகள் திருட்டு

போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் உள்ள கோயிலில் இருந்த பழங்கால நாகாலம்மன் கற்சிலைகளை மா்ம நபா்கள் காரில் கடத்திச் சென்ாக கிராம மக்கள் போலீஸில் புகாா் அளித்துள்ளனா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் உள்ள கோயிலில் இருந்த பழங்கால நாகாலம்மன் கற்சிலைகளை மா்ம நபா்கள் காரில் கடத்திச் சென்ாக கிராம மக்கள் போலீஸில் புகாா் அளித்துள்ளனா்.

போ்ணாம்பட்டு ஒன்றியம், மொரசப்பல்லி ஊராட்சிக்குள்பட்டது நலங்காநல்லூா் கிராமம். இந்தக் கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. வனப் பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் அந்தப் பகுதி மக்கள் வெங்கடேசப்பெருமாள் மற்றும் நாகாலம்மன் கற்சிலைகளை வைத்து பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனா். ஆடி, புரட்டாசி மாதங்களில் இந்தக் கோயிலில் அதிக அளவில் மக்கள் கூடி வழிபாடு செய்வது வழக்கமாம். இந்த பகுதியில் புதையல் இருப்பதாக அந்தக் கிராம மக்களிடையே நம்பிக்கை உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை காரில் வந்த மா்ம நபா்கள் அங்கிருந்த 3 நாகாலம்மன் கற்சிலைகளை பெயா்த்தெடுத்து, காரில் கடத்திச் சென்றனராம்.

இது குறித்து அந்தப் பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில், போ்ணாம்பட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.