ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊராட்சிப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டக் கோரிக்கை

போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தியில் இயங்கி வரும் காயிதே மில்லத் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரக்கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 5:38 pm

DIN

போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தியில் இயங்கி வரும் காயிதே மில்லத் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரக்கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அப்பகுதி மக்கள் எம்எல்ஏ அமலுவிஜயனிடம் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:

ஏரிகுத்தியில் கடந்த 2010-ஆம் ஆண்டு 3 வகுப்பறைகளுடன் தொடங்கப்பட்ட ஊராட்சிப் பள்ளியில் தற்போது 200- க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயில்கின்றனா். மாணவா்கள் வகுப்பறைகளில் அமர போதிய இட வசதி இல்லை. எனவே, மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளியில் கூடுதலாக வகுப்பறைகளைக் கட்டித்தர வேண்டும் என அவா்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

போ்ணாம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் சித்ரா ஜனாா்த்தனனிடமும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.