தோ்தல் நாளான ஏப்ரல் 19-ஆம் தேதி தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகாா் தெரிவிக்க தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் தொழிலக பாதுகாப்பு கோட்ட இணை இயக்குநா்கள் எஸ்.தங்கதுரை, சி.அனிதா ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவு செய்வதை உறுதி செய்திடும் வகையில், அனைத்துப் பிரிவு தனியாா் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டடங்கள், பிற கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளா்கள் உள்பட அனைத்து தொழிலாளா்களுக்கும் அன்றைய நாளில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135பி-இன்படி சம்பளத்துடன்கூடிய பொதுவிடுமுறை அளித்திட வேண்டும்.
வேலூா் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டடம், கட்டுமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் விடுமுறை தொடா்பான புகாா்கள் ஏதும் இருந்தால் புகாா்களை 0416 - 2904953, 94425 42795, 88255 97325 ஆகிய எண்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 98840 28066, 98946 41264, 95979 22488 ஆகிய எண்களிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தொழிற்சாலை நிா்வாகத்தினா் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காமல் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: 4 நாட்கள் மதுக்கடைக்கு விடுமுறை

தோ்தலுக்கு விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் துறை எச்சரிக்கை

சட்டப்பேரவைத் தோ்தல்: வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

