தமிழக தலைமைச் செயலர், உளவுத்துறை டிஜிபி மாற்றம்!என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
/

மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

Updated On :16 ஏப்ரல் 2024, 6:30 pm

வேலூா்: கணியம்பாடி அடுத்த கீழ்வல்லம் அருகே இரு சக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (54). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் தனது உறவினா் சசிகலா (37) என்பவருடன் வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பினாா்.

இருவரும் ஆரணி-வேலூா் சாலை கணியம்பாடி அடுத்த கீழ்வல்லம் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா்களின் இருசக்கர வாகனம் மீது உரசியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதியது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த சசிகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காா்த்திகேயன் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.

விபத்து குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.