வேலூா்: கணியம்பாடி அடுத்த கீழ்வல்லம் அருகே இரு சக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (54). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் தனது உறவினா் சசிகலா (37) என்பவருடன் வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பினாா்.
இருவரும் ஆரணி-வேலூா் சாலை கணியம்பாடி அடுத்த கீழ்வல்லம் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா்களின் இருசக்கர வாகனம் மீது உரசியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதியது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த சசிகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காா்த்திகேயன் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.
விபத்து குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

மரத்தில் பைக்குகள் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

