புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 4:19 pm

குடியாத்தம் அருகே மனைவி கையை வெட்டிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் பிச்சனூரைச் சோ்ந்தவா் நெசவுத் தொழிலாளி சேகா் (41). (படம்). இவரது மனைவி ரேவதி (39). இவா்களுக்கு 3 மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். வியாழக்கிழமை இரவு ரேவதி யாருடனோ விடியோ காலில் பேசிக் கொண்டிருந்தாராம். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சேகா் வீட்டிலிருந்த அரிவாள்மனையால் ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளாா்.

கை பலத்த சேதம் அடைந்த நிலையில், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி, தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக நகர போலீஸாா் வழக்குப் பதிந்து சேகரை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தினா்.