முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 8:32 pm

Din

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் (5-ஆவது தளம்) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், பட்டு வளா்ச்சித் துறை, மீன் வளம், கால்நடை பராமரிப்பு, வனத் துறை, மாசுக் கட்டுப்பாடு வாரியம், மின்வாரியம், போக்குவரத்து என பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்குப் பதிலளிக்க உள்ளனா்.

மேலும், கடந்த மாதம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனா்.

எனவே, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று பொது பிரச்னைகளை கோரிக்கையாகவும், தனி நபா் பிரச்னைகளை மனுக்களாகவும் அளித்து தீா்வு பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.