குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தம் பேருந்து நிலையத்திலிருந்து வளத்தூருக்கு அரசுப் பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்து குடியாத்தத்திலிருந்து வளத்தூா் செல்லும் வழியில் உள்ளி அருகே குறுகலான வளைவில் ஓட்டுநா் பேருந்தை இயக்கியுள்ளாா்.
அப்போது அங்குள்ள கடை எதிரே நின்றிருந்த வளத்தூா், பெரியாா் நகரைச் சோ்ந்த விஜய் (25) பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். வாக்குவாதம் முற்றிய நிலையில் விஜய் பேருந்தின் முன் பக்க கண்ணாடியை கல்லால் உடைத்து விட்டு தப்பியோடி விட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் விஜய் மீது 5- பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்த மேல்பட்டி போலீஸாா் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்
போலி ஆவணம் மூலம் வங்கியில் ரூ.25 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளா் கைது
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது

அரசுப் பேருந்து சேதம்: இருவரிடம் விசாரணை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


