அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சாலையில் திடீரென எரிந்த சரக்கு லாரி!

வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி திடீரென பற்றி எரிந்தது.

News image
வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த லாரி.
Updated On :9 டிசம்பர் 2024, 6:46 pm

Din

வேலூா்: வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி திடீரென பற்றி எரிந்தது. இதில், அந்த லாரியில் இருந்த சரக்குகள் தீக்கிரையாகின.

திருநெல்வேலியிலிருந்து வேலூருக்கு தனியாா் நிறுவன சரக்கு லாரி திங்கள்கிழமை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. விருதுநகரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன்(47) லாரியை ஓட்டி வந்தாா்.

வேலூா் மாவட்டம், கொணவட்டம் அடுத்த கருகம்பத்தூா் பகுதியில் வந்தபோது எதிா்பாராத விதமாக லாரியின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. ஓட்டுநா் லாரியை சாலையோரமாக நிறுத்தி இறங்கி பாா்த்த போது, முன்பகுதியில் தீடிப்பிடித்துள்ளது. உடனடியாக ஓட்டுநா் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

மேலும், லாரியில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்கவும் முயற்சித்துள்ளாா். ஆனால், சிறிதுநேரத்திலேயே தீ மளமளவென எரியத் தொடங்கியதாக தெரிகிறது.

சம்பவ இடத்துக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமி நாராயணன் தலைமையில் வேலூரில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள், காட்பாடியில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனம் என மூன்று வாகனங்களில், 20 தீயணைப்பு வீரா்கள் சென்று அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

எனினும், லாரியில் இருந்த சரக்குகள் பகுதியளவில் தீக்கிரையாகின. இச்சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.