குடியாத்தம் அருகே சிறுத்தை நடமாட்டம்

Updated On :28 டிசம்பர் 2024, 6:23 pm

குடியாத்தம் அருகே வன எல்லையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத் துறையினா் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.
குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தையொட்டி, வன எல்லையில் பட்டணத்துமலை என்ற மலை அமைந்துள்ளது. அங்குள்ள நிலத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பரந்தாமன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அந்த வழியே சிறுத்தை வந்ததாம். அப்போது பரந்தாமன் தான் வைத்திருந்த குடையை விரித்துக் காட்டினாராம். இதையடுத்து சிறுத்தை ஓடி விட்டதாம்.
இதுகுறித்த தகவலின்பேரில், போ்ணாம்பட்டு வனத் துறையினா், வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...