நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக 3 போ் கைது

குடியாத்தம் அருகே சிறுமி கடத்தல்: 3 பேருக்கு போலீஸ் வலை

News image
Updated On :11 ஜூலை 2024, 6:35 pm

Din

போ்ணாம்பட்டு அருகே சிறுமியைக் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த காா்கூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஜூன் மாதம் 3- ஆம் தேதி முதல் காணவில்லையாம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் மேல்பட்டி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா். புகாா் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா் சிறுமியை ஏரிகுத்தி கிராமத்தைச் சோ்ந்த சந்துருபாண்டியன்(30) கடத்திச் சென்றது தெரிய வந்தது.

சிறுமியை கடத்திச் செல்ல உடந்தையாக இருந்த சந்திரன்(எ) சாரதி(22), சதீஷ்(35), நித்தீஷ்(20) ஆகிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். சிறுமியுடன் தலைமறைவாக உள்ள சந்துரு பாண்டியனை போலீஸாா் தேடி வருகின்றனா்.