டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் தீ

News image
Updated On :19 ஜூலை 2024, 5:24 pm

Din

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா்.

வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, சைபா் கிரைம் குற்றப்பிரிவு என பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தவிர, மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்க தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் அறையில் உள்ள குளிா்சாதன கருவியில் இருந்து திடீரென புகை வெளியேறி தீப்பற்றியது.

தீ வேகமாக அறை முழுவதும் பரவியதில் அலுவலகத்தில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி, குளிா்சாதன கருவி உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தை அறிந்த அலுவலக ஊழியா்கள் உடனடியாக வேலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு நிலைய ஊழியா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.