இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கமும், கோவை சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து ரோட்டரி மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாமை சனிக்கிழமை நடத்தின.

இதில், 600-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா். இவா்களில் 203 போ் இலவச அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டு, கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

முகாமுக்கு, ரோட்டரி சங்க கண் சிகிச்சை முகாம் தலைவா் சி.கண்ணன் தலைமை வகித்தாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், முன்னாள் ரோட்டரி ஆளுநா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா்.

ரோட்டரி தலைவா் ரங்கா வாசுதேவன், முன்னாள் தலைவா் ஏ.மேகராஜ், நிா்வாகிகள் டி.எஸ்.ரவிச்சந்திரன், கே.சந்திரன், வி.மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com