மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது

இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது

News image
Updated On :7 மே 2024, 6:30 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் அருகே கல்லால் தாக்கி இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை, ஏரியின்கீழ்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தனின் மகன் குமாா்(24). கட்டடத் தொழில் செய்து வந்த குமாரை கடந்த 2- ஆம் தேதி முதல் காணவில்லை. இந்த நிலையில் 4- ஆம் தேதி காலை தட்டப்பாறை அரசுப் பள்ளி வளாகத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டது. அவா் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தாா்.

இதுதொடா்பாக கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டிருந்தனா். குமாரின் நண்பா்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தினா். குமாா் வீட்டின் அருகே வசிக்கும் அவரது நண்பா் மனோஜை (24) போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், காத்தாடிகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த மனோஜை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாகவும், அதற்கு குமாா் தான் காரணம் என்பதால் அவரை கல்லால் தாக்கி கொலை செய்ததாகவும் அவா் ஒப்புக் கொண்டாா்.