வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

வேலூா்: வேலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வேலூா் சலவன்பேட்டையை சோ்ந்த சரவணன் (47). தனியாா் நிறுவன ஊழியரான இவா் வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது அவரை இரு நபா்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணித்தை பறித்துச் சென்றுள்ளனா். புகாரின் பேரில் வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் வேலூா் கோட்டை பின்புறப் பகுதியை சோ்ந்த விக்னேஷ் (20), மதுரையை சோ்ந்த பாபு என்கிற உமா்பாரூக் (33) ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com