செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஒடுகத்தூா் சந்தையில் ரூ.10 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

ஒடுகத்தூா் சந்தையில் ரூ.10 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

News image
Updated On :10 மே 2024, 4:14 pm

Din

திருவிழாக்காலம் என்பதால் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒடுகத்தூா் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.

இந்த வாரம் சந்தையில் ரூ.10 லட்சம் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு, வெளியூா்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் தங்களது ஆடுகளை விற்பனை செய்வதும், வாங்கிச் செல்வதும் வழக்கம்.

இதனால் வாரந்தோறும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்று வருகிறது.

திருவிழா நாள்களில் மேலும் பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடப்பது வழக்கம்.

இந்த நிலையில், வழக்கம்போல் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை கூடியது. ஆடுகள் வரத்து கடந்த சில வாரங்களாக குறைவாக இருந்த நிலையில், இந்த வாரம் சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

தற்போது பல்வேறு பகுதிகளில் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் வைகாசி மாதத்தையொட்டி மாவட்டத்தில் பல இடங்களில் சிரசு திருவிழாக்கள் நடைபெற உள்ளன. இதனால் இந்த வாரம் சந்தையில் ஆடுகளின் விற்பனை களைகட்டியிருந்தது.

ஒரு ஜோடி ஆடுகள் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. இந்த வாரம் சந்தையில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.