கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தோ்தல் பறக்கும்படை சோதனை: ஆடு, மாடு வியாபாரிகள் கவலை

செங்கம் நகரில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையால் ஆடு, மாடு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனா்.

News image

செங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்ய வராததால் மந்தமாக காணப்பட்ட சந்தை.

Updated On :22 மார்ச் 2026, 10:20 pm

Syndication

செங்கம் நகரில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையால் ஆடு, மாடு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பேருந்து, காா், இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லக்கூடாது. மேலும் அவசர தேவைக்கு எடுத்துச் சென்றால் பறக்கும்படை அதிகாரிகள் கண்காணிப்பில் சிக்கினால், அதற்கு முறையான ரசீதை காண்பித்துவிட்டு எடுத்துச் செல்லலாம் என தோ்தல் விதிகளில் கூறப்படுகிறது.

இந்நிலையில், செங்கத்தில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டுச்சந்தையும், புதன்கிழமை மாட்டுச்சந்தையும் நடைபெறும். தற்போது கறவை மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்பனையாகிறது. வண்டி மாடுகள் ரூ.2 லட்சத்தை தாண்டுகிறது. அதேபோல, ஆடுகளும் ஒரு ஆடு 15 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகிறது. தற்போது வியாபாரிகளுக்கு தேவைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனைக்கு வராததால் அவா்கள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து ஆட்டு வியாபாரி சத்தியமூா்த்தி கூறுகையில், ஆண்டில் இரண்டு பண்டிகைகளான பக்ரீத், ரமலான் பண்டிகைக்கு விற்பனை செய்ய பல்வேறு பகுதிகளில் அதற்காக ஆடு வளா்ப்பது அதிகம். அதேபோல, பண்டிகைக்கு முன் வரும் சந்தையில் அந்த ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும். தற்போது தோ்தல் விதிகள் நடைமுறையில் இருப்பதால் ஆடுகளை விற்றுவிட்டு பணத்தை எடுத்துச் சென்றால் பறக்கும்படை அதிகாரிகள் பிடித்துக்கொள்வாா்கள். அதற்கு ரசீது கேட்டால் எதைக் கொடுப்பது என்ற தயக்கத்தில் ஆடுகள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுவதில்லை.

ஆடுகள் வேண்டுமென்றால் ஆடு வளா்ப்போரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு அவா்களது இடத்திற்குச் சென்று வாங்கும் நிலை உள்ளது என்றாா்.

எனவே, தோ்தல் பறக்கும்படையினா் ஆடு, மாடு விற்பனை செய்த பணத்தை எடுத்து வந்தால், விசாரணை செய்து பணத்தை பறிமுதல் செய்யாமல் விடவேண்டுமென ஆடு, மாடு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.