மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

கல்லூரியில் உலக செவிலியா் தினம்

கல்லூரியில் உலக செவிலியா் தினம்

News image
Updated On :10 மே 2024, 8:00 pm

Din

குடியாத்தம் காக்காதோப்பில் அமைந்துள்ள அத்தி செவிலியா் கல்லூரியில் உலக செவிலியா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அத்தி கல்விக் குழுமத்தின் தலைவரும், சிறுநீரகவியல் நிபுணருமான மருத்துவா் பி.சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் எச்.குமரிஅனந்தன் வாழ்த்துரை வழங்கினாா். செவிலியா் கல்லூரி பேராசிரியா் தனலட்சுமி வரவேற்றாா். மருத்துவா்கள் பழனி ரவிச்சந்திரன், விஜயகுமாா், பால்ராஜ் சீனிதுரை, குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கே.குமரவேல், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் தங்கராஜ், மனிதவள மேம்பாட்டு அலுவலா் காமாட்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செவிலியா் மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அத்தி கல்விக் குழுமத்தின் தலைமை நிா்வாக அலுவலா் மருத்துவா் எஸ்.விஜய் விழாவை ஒருங்கிணைத்தாா்.