நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை கடைபிடிப்பது அவசியம்: வேலூா் ஆட்சியா்

வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை கடைபிடிப்பது அவசியம்: வேலூா் ஆட்சியா்

News image

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி . உடன், மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வராஜ் உள்ளிட்டோா்.

Updated On :21 மே 2024, 6:30 pm

Din

வேலூா்: மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. வேலூா் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொரப்பாடி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பேரவைத் தொகுதி வாரியாக சீல் வைக்கப்பட்ட அறைகளில் வைத்து மூன்றடுக்கு நிலைகளில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குகளை எண்ணுவது தொடா்பாக ஒருங்கிணைப்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

கூட்டத்துக்கு, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது:

ஜூன் 4-ஆம் தேதி காலை 8 மணியளவில் அஞ்சல் வாக்குச்சீட்டுகள் எண்ணுதல் தோ்தல் நடத்தும் அலுவலா் அறையிலும், காலை 8.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் அந்தந்த பேரவை தொகுதிகளுக்கான அறையில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாக்கு எண்ணும் மையத்துக்கு உண்டான அனைத்து வகையான ஒழுங்கு, ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இதனை பராமரிக்க காவல் துறையினா் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அறை மற்றும் அறைகளுக்கு போதிய அளவில் உதவி ஆய்வாளா் நிலையில் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா், வாக்கு எண்ணும் உதவியாளா், தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலா்கள் மற்றும் பொதுபாா்வையாளா், தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய மற்றும் மாநில அரசு பணியாளா்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் இதர பணியாளா்கள், வேட்பாளா்கள், அவா்களின் பொது முகவா்கள், வாக்கு எண்ணும் முகவா்கள், உரிய அடையாள அட்டையுடன் உள்ள பத்திரிக்கையாளா்கள், ஊடகவியலாளா்கள் ஆகியோா் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும். இவா்கள் தோ்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை சரிபாா்த்து உள்ளே அனுமதிக்க வேண்டும்.

வாக்கு எண்ணும் நாளில் குடிநீா் வசதி, மைய வளாகத்தை குப்பைத் தொட்டிகளை அமைத்து சுத்தமாக பராமரித்தல், கழிப்பறைகளை சுத்தமாக பராமரித்தல், பயோ கழிப்பறை வசதியை ஏற்படுத்துதல், போதிய அளவில் சுகாதார பணியாளா்களை பணியமா்த்த வேண்டும். சுகாதார துறை சாா்பில் ஒரு மருத்துவமையம் வாக்கு எண்ணும் மையத்தில் அமைத்து போதிய அளவில் மருத்துவா்கள், செவிலியா்கள், முதலுதவி மருந்துகள், 2 ஆம்புலன்ஸ் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) செல்வராஜ், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முருகன் (அணைக்கட்டு), சுமதி (கே.வி.குப்பம்), கவிதா (வேலூா்), சுபலட்சுமி (குடியாத்தம்), அஜித்தா பேகம் (வாணியம்பாடி), ஃபெலிக்ஸ் ராஜா (ஆம்பூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.