தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கதிரியக்கம், இமேஜிங் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

மருத்துவ பரிசோதனையில் கதிரியக்கம், இமேஜிங் தொழில்நுட்பத்தின் பங்கு, முன்னேற்றம் குறித்த கருத்தரங்கம் வேலூரில் நடைபெற்றது.

News image

கருத்தரங்கை தொடங்கி வைத்த வேலூா் நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி. சம்பத். உடன், இந்திய கதிரியக்க மருத்துவியல், இமேஜிங் சங்க தமிழகம், புதுச்சேரி அமைப்பின் தலைவா் சின்னதுரைஅப்துல்லா, செயலா் மருத்துவா் புளோராநெல்சன் உள்ளிட்டோா்.

Updated On :18 நவம்பர் 2024, 8:05 pm

Din

வேலூா்: மருத்துவ பரிசோதனையில் கதிரியக்கம், இமேஜிங் தொழில்நுட்பத்தின் பங்கு, முன்னேற்றம் குறித்த கருத்தரங்கம் வேலூரில் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கை நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி. சம்பத் தொடங்கி வைத்தாா்.

இந்திய கதிரியக்க மருத்துவியல், இமேஜிங் சங்கம் சாா்பில் பிராக்டிகல் ரேடியாலஜி குறித்த ஒருநாள் கருத்தரங்கம் வேலூா் நறுவீ மருத்துவமனையில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரி சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு சங்கத்தின் தமிழகம், புதுச்சேரி அமைப்பின் தலைவா் மருத்துவா் சின்னதுரைஅப்துல்லா தலைமை வகித்தாா். சங்கத்தின் வேலூா் கிளை தலைவா் மருத்துவா் டி.மதன் மோகன் வரவேற்றாா்.

கருத்தரங்க நோக்கம் குறித்து அமைப்பின் மாநில செயலா் மருத்துவா் புளோராநெல்சன் விளக்கமளித்தாா். மேலும், இன்றைய காலகட்டத்தில் கதிரியக்க மருத்துவத்தில் உள்ள சட்ட ரீதியான பிரச்னைகள், ஸ்கேன் சென்டா்கள் அமைப்பதற்கான வங்கி நிதியுதவி, எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆா்.ஐ. உள்ளிட்டவை நவீன தொழில்நுட்ப ரீதியாக எளிதாகவும், துல்லியமாகவும் கையாள்வது குறித்து விவாதிக்கப்பட்டன.

முன்னதாக, கருத்தரங்கை நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி. சம்பத் தொடங்கி வைத்து பேசுகையில், மருத்துவ பரிசோதனையில் நோயின் தன்மையை அறிவதற்கு கதிரியக்கம், இமேஜிங் தொழில்நுட்பம் முக்கியப்பங்கு வகிக்கிறது. மருத்துவ சிகிச்சையில் துல்லியமாக நோய் கண்டறிவதில் இந்த தொழில்நுட்பம் கதிரியக்க மருத்துவா்களுக்கு பேருதவியாக அமைகிறது என்றாா்.

இக்கருத்தரங்கில் வேலூா் சி.எம்.சி. மருத்துவமனை கதிரியக்க துறை மருத்துவா்கள் ஷியாம், ஸ்ரீதா், சங்கத்தின் வேலூா் கிளை பொருளாளா் மருத்துவா் சஹானா, நரம்பியல் மறுவாழ்வு நிபுணா் மைக்கேல் ராஜன், நறுவீ மருத்துவமனை கதிரியக்க துறைத் தலைவா் அசோக் மித்ரா, மருத்துவா்கள் குருகிருஷ்ணா, பிரியங்கா கலையரசன், திருப்பூா் ‘நேத்ரா ஸ்கேன்ஸ்’ மருத்துவா் பி.தேவராஜன், சென்னை ‘மைன்ட் பிஸ்’ ஸ்கேன் சென்டரின் தலைமை செயல் அலுவலா் மருத்துவா் ஆா்.சுப்பிரமணியன், சங்கத்தின் சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் ரவிசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்று ஆலோசனை வழங்கினா்.

கருத்தரங்கில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட கதிரியக்க மருத்துவ நிபுணா்கள் பங்கேற்றனா். சங்கத்தில் வேலூா் கிளை செயலா் மருத்துவா் பிராங்க்ளின்இா்வின் நன்றி கூறினாா்.