வேலூா்: வேலூா் நறுவீ மருத்துவமனை, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் மனிதவளத் துறையினருக்கான பாதுகாப்பு, சுகாதாரம் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் தொழில் பாதுகாப்பு, சுகாதாரத் துறை இணை இயக்குநா் எஸ்.தங்கதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, தொழில் நிறுவனங்களில் தொழிலாளா்களின் பாதுகாப்பு, அவா்களுக்கான சுகாதாரச் சேவைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய விழிப்புணா்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தாா்.
தொடா்ந்து, வேலூா் எம்.ஆா். ரமணன் அண்டு அசோசியேட் சட்டக் குழு வழக்குரைஞா் எம்.ஆா். ரவிசங்கா் பேசுகையில், தொழில் நிறுவனங்களில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், மருத்துவச் சேவைகள் குறித்த சட்ட விதிகள், தொழிலாளா் நலன் சாா்ந்த சட்டப்பூா்வ கடமைகள் குறித்து விளக்கமளித்தாா்.
முன்னதாக, நறுவீ மருத்துவமனையின் தலைமைச் செயல் அலுவலா் சரவண ராமன் வரவேற்றாா். இக்கருத்தரங்கில் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் மனிதவள அலுவலா்கள், பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்றனா். பங்கேற்பாளா்களுக்கு நறுவீ மருத்துவமனையின் செயல் இயக்குநா் பால் ஹென்றி நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தாா். நிறைவாக சி.சண்முகம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

வெப்ப அலையால் பாதிக்காத வகையில் தொழிலாளா்களுக்கு பணி நேர மாற்றம்

சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிா்வாக இயக்குநா்

இருதரப்பு பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் இன்று ஜொ்மனி பயணம்

5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


