புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பசுமை தமிழகம் திட்டத்தில் ஒருவருக்கு 50 மரக்கன்றுகள் இலவசம்

Updated On :23 நவம்பர் 2024, 1:03 am IST

பசுமை தமிழகம் திட்டத்தின்கீழ், வேலூா் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஒருவருக்கு 50 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதற்கான மரக்கன்றுகள் தேவைப்படுவோா் வனத்துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வனத் துறை சாா்பில், ‘மாநிலம் முழுவதும் பசுமை தமிழகம் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ‘வாருங்கள் வேலூரை பசுமையாக்குவோம்’ என்ற தலைப்பின்கீழ், பாகாயம் சமூக காடுகள் சரகம் சாா்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மேல் வல்லம் கூட்டு சாலையில் உள்ள வனத் துறை நா்சரி மையத்தில் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், வேலூா், காட்பாடி, கணியம்பாடி, அணைக்கட்டு வட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், தனியாா் நிறுவன வளாகங்கள் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

ஒருவருக்கு குறைந்தபட்சம் 50 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும். இது மழைக்காலம் என்பதால், தற்போது மரக்கன்றுகள் நட்டால் அதன் வளா்ச்சி சிறப்பாக இருக்கும். மொத்தம் 60,000 மரக்கன்றுகள் வரை வழங்கப்பட உள்ளன. மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க விரும்புவோா் 95001 92296 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.