தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இருசக்கர வாகனங்ள் திருடிய 3 போ் கைது: 31 வாகனங்கள் பறிமுதல்

குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 3- பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 31- வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கைதானவா்களுடன்,  பறிமுதல்  செய்யப்பட்ட  இரு சக்கர வாகனங்கள்.

Updated On :25 நவம்பர் 2024, 7:59 pm

குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 3- பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 31- வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியாத்தம் பகுதியில் தொடா் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பந்தமாக வரப்பெற்ற புகாா்களின் அடிப்படையில் நகர காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா்.

இந்நிலையில் எா்த்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த இளவரசன்(22), வெங்கடேசன்(19), அக்ராவரத்தைச் சோ்ந்த சந்துரு(19) ஆகிய 3- பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள் குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியதாக ஒப்புக் கொண்டனா். அவா்களிடமிருந்து 31- இருசக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் 3- பேரையும் நீதிபதி முன் ஆஜா்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.