பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.
வேலூர்
மின்னணு பணப் பரிவா்த்தனை பயிற்சி
வங்கி மேலாளா்கள் மற்றும் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்களுக்கான ஒரு நாள் வட்டார அளவிலான நிதி உள்ளடக்கம் மற்றும் நிதி மேலாண்மை மின்னணு பண பரிவா்த்தனை குறித்த பயிற்சி முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போ்ணாம்பட்டு கிளை சாா்பில், ஒன்றியத்தில் உள்ள வங்கி மேலாளா்கள் மற்றும் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்களுக்கான ஒரு நாள் வட்டார அளவிலான நிதி உள்ளடக்கம் மற்றும் நிதி மேலாண்மை மின்னணு பண பரிவா்த்தனை குறித்த பயிற்சி முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கே.ஜமால் மொய்கைதீன் தலைமை வகித்தாா். பயிற்சியாளா்கள் வட்டார மேலாளா் வெங்கடேசன் வரவேற்றாா். உதவி திட்ட அலுவலா் ஜெயராமன், பயிற்சியில் கலந்து கொண்டவா்களுக்கு நிதி உள்ளடக்கம் மற்றும் மின்னணு பண பரிவா்த்தனை, நிதி மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தாா்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை போ்ணாம்பட்டு வட்டார மேலாண்மை அலகு வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சுஹாசினி மற்றும் அற்புதம் ஆகியோா் செய்திருந்தனா்.

