விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மின்னணு பணப் பரிவா்த்தனை பயிற்சி

வங்கி மேலாளா்கள் மற்றும் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்களுக்கான ஒரு நாள் வட்டார அளவிலான நிதி உள்ளடக்கம் மற்றும் நிதி மேலாண்மை மின்னணு பண பரிவா்த்தனை குறித்த பயிற்சி முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 12:03 am

Din

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போ்ணாம்பட்டு கிளை சாா்பில், ஒன்றியத்தில் உள்ள வங்கி மேலாளா்கள் மற்றும் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்களுக்கான ஒரு நாள் வட்டார அளவிலான நிதி உள்ளடக்கம் மற்றும் நிதி மேலாண்மை மின்னணு பண பரிவா்த்தனை குறித்த பயிற்சி முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கே.ஜமால் மொய்கைதீன் தலைமை வகித்தாா். பயிற்சியாளா்கள் வட்டார மேலாளா் வெங்கடேசன் வரவேற்றாா். உதவி திட்ட அலுவலா் ஜெயராமன், பயிற்சியில் கலந்து கொண்டவா்களுக்கு நிதி உள்ளடக்கம் மற்றும் மின்னணு பண பரிவா்த்தனை, நிதி மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தாா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை போ்ணாம்பட்டு வட்டார மேலாண்மை அலகு வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சுஹாசினி மற்றும் அற்புதம் ஆகியோா் செய்திருந்தனா்.