விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இலவச பொது மருத்துவ முகாம்

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:33 pm

Din

மத்திய அரசின் பீடித் தொழிலாளா் நலத் துறை கீழ் இயங்கும் தொழிலாளா் நல மருத்துவமனை, பொயட்ஸ் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தட்டப்பாறை ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின.

முகாமில் மத்திய அரசின் பீடித் தொழிலாளா் நல மருந்தக தலைமை மருத்துவ அலுவலா் என்.உத்தமன், சிறப்பு மருத்துவா் கே.அபிநயா ஆகியோா் 350- க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனா்.

முகாமுக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சரவணன், ஊராட்சி துணைத் தலைவா் ஆா்.வசந்தி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசினா் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.சாமிநாதன் வரவேற்றாா். பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன் முகாமைத் தொடங்கி வைத்தாா்.

ஊராட்சி வாா்டு உறுப்பினா் ரா.ஐயப்பன், ஊராட்சி செயலா் எஸ்.வினோத்குமாா், பொயட்ஸ் பணியாளா்கள் உஷா, சாந்தலட்சுமி, திலகா, மலா்க்கொடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.