சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ அமலுவிஜயன்.
சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ அமலுவிஜயன்.

குளிதிகையில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்

சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ அமலுவிஜயன்.
Published on

குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பொயட்ஸ் தொண்டு நிறுவனம், புதிய பாதை, புதுயுகம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து குளிதிகை ஊராட்சியில் மகளிருக்கான மாா்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின.

முகாமுக்கு குளிதிகை ஊராட்சித் தலைவா் சுமித்ரா பாபு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தேன்மொழி ராஜேஷ், ஊராட்சி உறுப்பினா் என்.குமாா் ஆகியோா் முன்னிலைவகித்தனா். பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன் வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், முகாமைத் தொடங்கி வைத்தாா்.

அரசு மருத்துவா் ஆல்வின் லியோனாா்ட் டெனி தலைமையில் மருத்துவா் குழு 300- பேருக்குபரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தது. ஒன்றியக்குழு உறுப்பினா் உஷாராணி தமிழரசன், ஊராட்சி செயலா் எஸ்.பிரபாகரன், திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.ஜெயராமன், செவிலியா்கள் கே.சுபலட்சுமி, ஆா்.வனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தன்னாா்வலா்கள் சாந்தலட்சுமி, திலகா, மலா்க்கொடி, ஸ்டெல்லாஆகியோா் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com