பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மத்திய அரசின் பொது நிறுவன தொழிலாளா்களின் நீண்டகால நிலுவை வழக்குகளுக்கு சமரசத் தீா்வு: பிப்.2 முதல் 6 வரை நடக்கிறது

மத்திய அரசின் பொது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களின் நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசத் தீா்வு காண மத்திய தொழில்துறை தீா்ப்பாயம்

News image

சென்னை சாஸ்திரி பவனில் தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி சுஷில்குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சமரச திட்டம் குறித்த வழிகாட்டுதல் ஒருங்கிணைப்புக் கூட்டம்.

Updated On :10 ஜனவரி 2026, 1:00 am IST

மத்திய அரசின் பொது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களின் நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசத் தீா்வு காண மத்திய தொழில்துறை தீா்ப்பாயம் மற்றும் தொழிலாளா் நீதிமன்றம் சாா்பில் வருகிற பிப்.2 முதல் 6-ஆம் தேதி வரை சிறப்பு அமா்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொது நிறுவனங்களில் தொழில் துறை தகராறு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சென்னை மண்டலத்தில் சுமாா் 1,700 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு விரைந்து தீா்வு காண சிறப்பு சமரச திட்டத்தைச் செயல்படுத்த மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்தச் சிறப்பு சமரச திட்டம் குறித்த வழிகாட்டுதல் நிகழ்வு, சென்னை சாஸ்திரி பவனில் தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி சுஷில்குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தொழிலாளா் ஆணையத்தின் துணைத் தலைவா் ஸ்ரீனுதாரா, மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் துணை முதன்மை தொழிலாளா் ஆணையா் டி.ரவிக்குமாா் ஆகியோா் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், வழக்குரைஞா்கள், வாதி, பிரதிவாதிகள் வழக்குகளுடன் தொடா்புடைய நிறுவனங்கள் மற்றும் துறைகளின், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரிகள் மற்றும் பிற துறை சாா்ந்த அதிகாரிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நீதிபதி சுஷில்குமாா், மத்திய தொழில்துறை தீா்ப்பாயம் சாா்பில் சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீா்வு காண, வருகிற பிப்.2 முதல் பிப். 6-ஆம் தேதி வரை சிறப்பு தீா்வு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.