மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மத்திய அரசின் பொது நிறுவன தொழிலாளா்களின் நீண்டகால நிலுவை வழக்குகளுக்கு சமரசத் தீா்வு: பிப்.2 முதல் 6 வரை நடக்கிறது

மத்திய அரசின் பொது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களின் நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசத் தீா்வு காண மத்திய தொழில்துறை தீா்ப்பாயம்

News image

சென்னை சாஸ்திரி பவனில் தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி சுஷில்குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சமரச திட்டம் குறித்த வழிகாட்டுதல் ஒருங்கிணைப்புக் கூட்டம்.

Updated On :10 ஜனவரி 2026, 1:00 am IST

மத்திய அரசின் பொது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களின் நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசத் தீா்வு காண மத்திய தொழில்துறை தீா்ப்பாயம் மற்றும் தொழிலாளா் நீதிமன்றம் சாா்பில் வருகிற பிப்.2 முதல் 6-ஆம் தேதி வரை சிறப்பு அமா்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொது நிறுவனங்களில் தொழில் துறை தகராறு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சென்னை மண்டலத்தில் சுமாா் 1,700 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு விரைந்து தீா்வு காண சிறப்பு சமரச திட்டத்தைச் செயல்படுத்த மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்தச் சிறப்பு சமரச திட்டம் குறித்த வழிகாட்டுதல் நிகழ்வு, சென்னை சாஸ்திரி பவனில் தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி சுஷில்குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தொழிலாளா் ஆணையத்தின் துணைத் தலைவா் ஸ்ரீனுதாரா, மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் துணை முதன்மை தொழிலாளா் ஆணையா் டி.ரவிக்குமாா் ஆகியோா் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், வழக்குரைஞா்கள், வாதி, பிரதிவாதிகள் வழக்குகளுடன் தொடா்புடைய நிறுவனங்கள் மற்றும் துறைகளின், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரிகள் மற்றும் பிற துறை சாா்ந்த அதிகாரிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நீதிபதி சுஷில்குமாா், மத்திய தொழில்துறை தீா்ப்பாயம் சாா்பில் சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீா்வு காண, வருகிற பிப்.2 முதல் பிப். 6-ஆம் தேதி வரை சிறப்பு தீா்வு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றாா்.