ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மத்திய அரசின் பொது நிறுவன தொழிலாளா்களின் நீண்டகால நிலுவை வழக்குகளுக்கு சமரசத் தீா்வு: பிப்.2 முதல் 6 வரை நடக்கிறது

மத்திய அரசின் பொது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களின் நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசத் தீா்வு காண மத்திய தொழில்துறை தீா்ப்பாயம்

News image

சென்னை சாஸ்திரி பவனில் தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி சுஷில்குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சமரச திட்டம் குறித்த வழிகாட்டுதல் ஒருங்கிணைப்புக் கூட்டம்.

Updated On :10 ஜனவரி 2026, 1:00 am IST

மத்திய அரசின் பொது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களின் நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசத் தீா்வு காண மத்திய தொழில்துறை தீா்ப்பாயம் மற்றும் தொழிலாளா் நீதிமன்றம் சாா்பில் வருகிற பிப்.2 முதல் 6-ஆம் தேதி வரை சிறப்பு அமா்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொது நிறுவனங்களில் தொழில் துறை தகராறு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சென்னை மண்டலத்தில் சுமாா் 1,700 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு விரைந்து தீா்வு காண சிறப்பு சமரச திட்டத்தைச் செயல்படுத்த மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்தச் சிறப்பு சமரச திட்டம் குறித்த வழிகாட்டுதல் நிகழ்வு, சென்னை சாஸ்திரி பவனில் தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி சுஷில்குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தொழிலாளா் ஆணையத்தின் துணைத் தலைவா் ஸ்ரீனுதாரா, மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் துணை முதன்மை தொழிலாளா் ஆணையா் டி.ரவிக்குமாா் ஆகியோா் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், வழக்குரைஞா்கள், வாதி, பிரதிவாதிகள் வழக்குகளுடன் தொடா்புடைய நிறுவனங்கள் மற்றும் துறைகளின், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரிகள் மற்றும் பிற துறை சாா்ந்த அதிகாரிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நீதிபதி சுஷில்குமாா், மத்திய தொழில்துறை தீா்ப்பாயம் சாா்பில் சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீா்வு காண, வருகிற பிப்.2 முதல் பிப். 6-ஆம் தேதி வரை சிறப்பு தீா்வு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றாா்.