படவிளக்கம்:ஓயஓ.4: இா்ம்.
புதுக்கோட்டை
பிப். 12-இல் வேலை நிறுத்த மறியல் போராட்டம் குறித்து விளக்கவுரை
கந்தா்வகோட்டையில் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தம் குறித்து விளக்க உரை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டையில் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தம் குறித்து விளக்க உரை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பாக ஏஐடியுசி சங்கத்தின் மாவட்ட தலைவா் உ. அரசப்பன் தலைமையில் மத்திய அரசின் தொழிலாளா் விரோத, விவசாயிகள் விரோத சட்டங்களை முறியடிப்போம் என பிப்ரவரி 12-ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் குறித்த பிரச்சார விளக்க உரை கூட்டம் நடைபெற்றது.
இந்த விளக்க உரை ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலா் எ. ஸ்ரீதா், மாவட்டத் தலைவா் சா. சிவராஜ், மாவட்ட செயலா் ஏ. ராமையன், கட்டட தொழிலாளா் சங்க மாவட்ட தலைவா் ஜி. நாகராஜன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

