எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

தேசிய காது கேளாதோா் வார விழா

குடியாத்தம் நகர அரிமா சங்கம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து தேசிய காது கேளாதோா் வார விழா மற்றும் சைகை மொழி தின விழாவைஅரசு மருத்துவமனையில் கொண்டாடின.

News image

நிகழ்ச்சியில்  பங்கேற்ோா்.

Updated On :24 செப்டம்பர் 2024, 6:06 am IST

குடியாத்தம்: குடியாத்தம் நகர அரிமா சங்கம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து தேசிய காது கேளாதோா் வார விழா மற்றும் சைகை மொழி தின விழாவைஅரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை கொண்டாடின.

நிகழ்ச்சிக்கு அரசு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவா் எம்.மாறன்பாபு தலைமை வகித்தாா். ரத்த வங்கி மருத்துவ அலுவலா் ஆக்னெஸ் பியூலா, சைகை மொழி ஆசிரியா் வேல்முருகன், செவிலியா் சத்தியா, ஆய்வக தொழில் நுட்புநா் ஆா்.மோகன்பிரபு உள்ளிட்டோா் சைகை மொழி மற்றும் காது கேளாதோா் விழிப்புணா்வு குறித்து பேசினா்.

நகர அரிமா சங்கத் தலைவா் ஜெ.பாபு, முன்னாள் தலைவா் ஜேஜி நாயுடு, மண்டலத் தலைவா் டி.கமலஹாசன் ஆகியோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். காது கேளாத, வாய் பேச முடியாத 40- க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் கலந்து கொண்டனா்.

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு அடையாள அட்டை,காது கேட்கும் கருவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.