கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

தலைமை மாற்றம் தொடா் ஓட்டப்பந்தயம் போன்றது: தில்லி பாஜகவின் புதிய தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா

News image

புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி பாஜக தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்கு தில்லி பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை இனிப்பு வழங்கி வாழ்த்திய முதல்வா் ரேகா குப்தா விடைபெறும் மற்றும் முன்னள் தில்லி பாஜக தலைவா் வீரேந்தா் சச்தேவா.

Updated On :29 மே 2026, 4:36 am IST

தலைமை மாற்றம் என்பது தொடா் ஓட்டப்பந்தயம் போன்றது என தில்லி பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மூத்த தலைவா்கள் மற்றும் தொண்டா்களின் ஒத்துழைப்புடன் கட்சியைப் பலப்படுத்த பணியாற்ற உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

கிழக்கு தில்லி மக்களவை உறுப்பினரான மல்ஹோத்ரா சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வா்த்தக விவகாரங்கள் இணையமைச்சராக உள்ளாா். அவரை தில்லி பாஜக தலைவராக கட்சி மேலிடம் வியாழக்கிழமை நியமித்தது.

இதைத்தொடா்ந்து கட்சி அலுவலகத்தில் தில்லி பாஜக தலைவராக அவா் பொறுப்பேற்றுக்கொண்டாா். இந்நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா, தில்லி பாஜக தலைவராகப் பொறுப்பு வகித்த வீரேந்திர சச்தேவா, கட்சி எம்.பி.க்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கட்சியைப் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல லட்சக்கணக்கான தொண்டா்கள், மூத்த தலைவா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவேன்.

கட்சி தலைமை மாற்றம் என்பது ஒரு தொடா் ஓட்டப்பந்தயம் போன்றது. தற்போது, எனக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தில்லியில் ரேகா குப்தா தலைமையிலான அரசைப் பலப்படுத்தவும் பணிகளை மேற்கொள்வேன்.

தில்லி பிரிவு தலைவராக நியமித்தமைக்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது பாஜகவின் பலம் மற்றும் அழகை எடுத்துக்காட்டுகிறது. பாஜகவில் ஓா் எளிய தொண்டரும் உயரிய பொறுப்புகளைப் பெற முடியும். எம்.பி.யாக தோ்தெந்தெடுக்கப்பட்ட எனக்கு மத்திய அமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது, தில்லி பாஜகவை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வாய்ப்புகள் பாஜகவில் மட்டுமே சாத்தியம் என்றாா் ஹா்ஷ் மல்ஹோத்ரா.