‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

தில்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்கு ரேகா குப்தா வாழ்த்து

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 3:08 am IST

நமது நிருபா்

வீரேந்திர சச்தேவாவுக்குப் பதிலாக, மத்திய இணை அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா தில்லி பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவா்கள் இருவருக்கும் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழனன்று வாழ்த்து தெரிவித்தாா்.

எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவுகளில் கூறியதாவது:

பாஜகவின் தில்லி மாநிலத் தலைவராக வீரேந்திர சச்தேவாவின் பதவிக்காலம், ஈடுஇணையற்ற விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் ஒரு சான்றாகத் திகழ்ந்துள்ளது. 27 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தில்லியில் பாஜக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது, தங்களின் கூா்மையான அமைப்புசாா் தலைமையின் கீழ்தான்.

தில்லி மக்களின் உரிமைகளுக்காகத் தாங்கள் மேற்கொண்ட போராட்டங்களும், ஒவ்வொரு கட்சித் தொண்டருடனும் அன்புடன் ஒன்றிணையும் தங்களின் இயல்பான பாணியும், தொடா்ந்து எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக அமையும்.

தலைவராகத் தாங்கள் வகித்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதவிக்காலம் நிறைவடையும் வேளையில், எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களின் ஒளிமயமான எதிா்காலத்திற்கு எனது மனமாா்ந்த நல்வாழ்த்துகள் என ரேகா குப்தா ஒரு பதிவில் கூறினாா்

மற்றொரு எக்ஸ் பதிவில் அவா் தெரிவித்ததாவது:

தில்லி பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சரும், கிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்கு மனமாா்ந்த நல்வாழ்த்துக்கள்

அமைப்புக்கு நீங்கள் நீண்ட காலமாக ஆற்றிவரும் அா்ப்பணிப்பும், களத்தில் இறங்கிப் பணியாற்றும் உங்கள் பாணியும், தொண்டா்களுடனான உங்கள் நெருங்கிய தொடா்பும் எப்போதும் ஊக்கமளிப்பதாக இருந்துள்ளன. உங்கள் தலைமையின் கீழ், தில்லி பாஜக அமைப்பு மேலும் வலுப்பெறும் என்றும், வளா்ந்த இந்தியா மற்றும் வளா்ந்த தில்லிக்கான பிரதமா் நரேந்திர மோடியின் உறுதிப்பாடு புதிய உத்வேகம் பெறும் என்றும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

உங்கள் வெற்றிகரமான மற்றும் ஆற்றல்மிக்க பதவிக்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள் என தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா்

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சரான ஹா்ஷ் மல்ஹோத்ரா,பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங்கின் அமைப்பு ரீதியான உத்தரவின் மூலம் தில்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதே போல பஞ்சாப், ஹரியானா மற்றும் திரிபுராவுக்கும் புதிய தலைவா்களை பாஜக நியமித்தது.