டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரௌடி வசூா் ராஜாவை என்கவுன்ட்டா் செய்ய முயற்சி: ஆட்சியரிடம் தாயாா் புகாா்

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரெளடி வசூா் ராஜாவை என்கவுன்ட்டா் செய்ய முயற்சி நடப்பதாகவும், அதைத் தடுக்க வேண்டும்

News image
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில் குமரன் உள்ளிட்டோா்.
Updated On :30 செப்டம்பர் 2024, 6:57 pm

Din

வேலூா்: வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரெளடி வசூா் ராஜாவை என்கவுன்ட்டா் செய்ய முயற்சி நடப்பதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என அவரது தாயாா் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, புதுவசூரை சோ்ந்த ரெளடியான வசூர்ராஜாவின் தாய் கலைச்செல்வி அளித்த மனுவில், எனது மகன் வசூா் ராஜா கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் அவ்வப்போது சில வழக்குகளுக்காக வேலூா் நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவாா்.

மேலும், எனது மகனை காவலில் எடுத்து போலீஸாா் என்கவுன்ட்டா் செய்யப்போவதாகவும் தகவல் கிடைத்துள் ளது. எனவே, எனது மகனின் உயிரை பாதுகாக்க வேண்டும். அவா் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யாமல் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

வேலூா் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளா்கள் அளித்துள்ள மனுவில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும், பணியாளா்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக மாவட்ட அலகில் இருந்து ஊதியம் விடுவிக்கவும், அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இருக்க வேண்டும், வருங்கால வைப்பு நிதி காப்பீடு, உயிரிழந்த பணியாளா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

வேலூா் கொணவட்டத்தை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அளித்துள்ள மனுவில், கொணவட்டத்தில் எங்கள் தெருவுக்கு செல்லும் சாலையை தனிநபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளாா். அவா் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

521 கோரிக்கை மனுக்கள்...

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 521 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க உள்ள குடியாத்தம் வட்டம் சீவூா் கிராமத்தை சோ்ந்த ஜெயமாருதியிடம் ஆட்சியரின் விருப்பகொடை நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) ராஜ்குமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில் குமரன், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ராமசந்திரன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கலியமூா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் சுமதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சீதா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.