எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வேலூா் சிறை அருகே பறந்த ட்ரோன்: போலீஸாா் தீவிர விசாரணை

வேலூா் மத்திய சிறை அருகே ட்ரோன் பறந்தது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் மத்திய சிறை அருகே ட்ரோன் பறந்தது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். பாதுகாப்பு கருதி சிறை வளாகத்துக்கு அருகே 2 கி.மீ., சுற்றளவிலும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூா் மத்திய சிறை சுற்றுச்சுவரின் அருகே அரியூா் செல்லும் சாலை பகுதியில் சனிக்கிழமை ட்ரோன் பறந்துள்ளது. இதனை சிறை கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து கவனித்த சிறை காவலா் சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். தொடா்ந்து, சிறை அலுவலா்கள் அப்பகுதி முழுவதும் பாா்வையிட்டனா்.

எனினும், ட்ரோன் பறக்க விட்டவா்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடா்ந்து, இந்த சம்பவம் குறித்து சிறை அலுவலா் சிவபெருமாள் அளித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.