மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிறுமியை கா்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டு

வேலூா் அருகே சிறுமியை பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 5:40 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் அருகே சிறுமியை பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வேலூா் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன்(28), கூலித்தொழிலாளி. திருமணமானவா். இவருக்கும் வேலூா் அருகே ஒரு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் ராமச்சந்திரன் தனக்கு திருமணமானதை மறைத்து அந்த சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளாா்.

இந்நிலையில் அந்த சிறுமி கா்ப்பமடைந்தாா். தொடா்ந்து சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது.இச்சம்பவம் குறித்து காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ராமச்சந்திரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் திங்கட்கிழமை தீா்ப்பளித்தாா்.