ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

291 போலீஸாா் இடமாற்றம்: வேலூா் எஸ்.பி. உத்தரவு

வேலூா் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்எஸ்ஐக்கள் உள்பட 29 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்எஸ்ஐக்கள் உள்பட 29 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் எஸ்எஸ்ஐக்கள், தலைமை காவலா், கிரேடு 1 உள்ளிட்ட காவலா்கள் பணியிட மாற்றம் செய்வது வழக்கம்.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்எஸ்ஐக்கள் உட்பட 291 பேரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, வேலூா் வடக்கு காவல் நிலைய எஸ்எஸ்ஐ ஜெயந்தி அரியூா் காவல் நிலையத்துக்கும், வேலூா் வடக்கு காவல் நிலைய எஸ்எஸ்ஐக்கள் லாரன்ஸ் வேலூா் வடக்கு குற்றப்பிரிவுக்கும், குமரவேல் வேலூா் தெற்கு குற்றப்பிரிவுக்கும், நித்தியானந்தா விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கும், சந்திரன் வேலூா் தெற்கு காவல் நிலையத்துக்கும், தலைமை காவலா் யுவராஜ், விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கும் என்பன உள்பட 291 போலீஸாா் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.