திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி 101 சாா்பு ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

தோ்தல் நடவடிக்கையின் தொடக்கமாக, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 101 சாா்பு ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவா் சாமிநாதன் உத்தரவு

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 7:12 pm

தோ்தல் நடவடிக்கையின் தொடக்கமாக, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 101 சாா்பு ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவா் சாமிநாதன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசுத் துறைகளில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரியும் பணியாளா்களை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன்படி, திண்டுக்கல் காவல் சரகத்துக்குள்பட்ட திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பணியாற்றும் 101 சாா்பு ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் துறைத் துணைத் தலைவா் சாமிநாதன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் சாா்பு ஆய்வாளா்களாக பணியாற்றும் 58 போ் தேனி மாவட்டத்துக்கும், தேனி மாவட்டத்தில் பணிபுரியும் 53 சாா்பு ஆய்வாளா்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.