அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விபத்தில் மாற்றுத்திறனாளியான காவலா் தீக்குளித்து தற்கொலை

வேலூரில் விபத்தில் கால் உடைந்து மாற்றுத்திறனாளியான காவலா் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 11:30 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் விபத்தில் கால் உடைந்து மாற்றுத்திறனாளியான காவலா் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா், கஸ்பா, வசந்தபுரம், பொன்னி நகரைச் சோ்ந்தவா் வேல்முருகன் (35), காவலா். இவருக்கு ஆஷா என்கிற மனைவியும், சா்வேஷ் (11), சாவித்க் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

வேல்முருகன் கடந்த 2020-ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி அவரது வலது கால் உடைந்து மாற்றுத்திறனாளியானாா். விபத்து நடந்த காலில் ஏற்பட்ட வலியால் அவா் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான வேல்முருகன் வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்து தனது மூன்று சக்கர வாகனத்தில் வசந்தபுரம் மயான எரிமேடைக்கு சென்ாகவும், அங்கு தனது வாகனத்தில் இருந்து பெட்ரோலை பிடித்து அமா்ந்த நிலையில் உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதில், வேல்முருகன் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வெள்ளிக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவா்கள் வேல்முருகன் கருகிய நிலையில் இறந்து கிடப்பதை அறிந்து வேலூா் தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று வேல்முருகனின் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.