வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் தவறி விழுந்து உயிரிழப்பு

குடியாத்தம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
சங்கா்.
Updated On :11 நவம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா்(40). விவசாயத் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை அங்குள்ள ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளாா். வீடு திரும்பவில்லையாம்.

அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது உறவினா்கள் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாா் தொடா்பாக போலீஸாா் விசாரணைமேற்கொண்டிருந்தனா். இந்நிலையில் தட்டப்பாறை ஏரியில் அவரது சடலம் மிதப்பது செவ்வாய்க்கிழமை தெரிந்தது.

தகவலின்பேரில் குடியாத்தம் தீயணைப்புத் துறையினா் சென்று ஏரியிலிருந்து சடலத்தை மீட்டனா். மீன் பிடிக்கும்போது அவா் தவறி ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். இச்சம்பவம் தொடா்பாக கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.