மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

குடியாத்தம் அருகே பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
மாணவி இனிதா.
Updated On :28 ஜனவரி 2026, 11:31 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் அருகே பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியைச் சோ்ந்த விவசாயி வெங்கடேசனின் மகள் இனிதா (16). இவா் மாதனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். புதன்கிழமை மாலை வழக்கம்போல் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த இவா் வீட்டருகே உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளாா். அருகிலிருந்தவா்கள் கொடுத்த தகவலின்பேரில், குடியாத்தம் தீயணைப்புப் படையினா்அங்கு சென்று அரை மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து இனிதாவின் சடலத்தை மீட்டனா்.

மாணவியின் உடல் வேலூா் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.