அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குட்கா கடத்திய காரை 15 கி.மீ. விரட்டிச் சென்று பிடித்த போலீஸாா்! 2 போ் கைது, 200 கிலோ குட்கா பறிமுதல்

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:39 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டம் சோ்க்காடு சோதனைச் சாவடி வழியாக குட்கா கடத்தி வந்த காரை போலீஸாா் 15 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று பிடித்தனா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டு 200 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூரை போதை இல்லாத மாவட்டமாக மாற்ற எஸ்.பி. ஏ.மயில்வாகனன் உத்தரவின்பேரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை மாலை பெங்களூவில் இருந்து சென்னைக்கு காரில் குட்கா கடத்தப்படுவதாக வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா காா்க்கின் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஐஜி தனிப்படை போலீஸாா் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள சோ்க்காடு சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனா். ஆனால், காரை நிறுத்துவதுபோல் ஏமாற்றி அதிவேகமாகச் சென்றனா். இதனைக் கண்ட போலீஸாா், தங்களது வாகனத்தில் காரை விரட்டிச் சென்றனா். மேலும் இதுகுறித்து திருவலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

காவல் ஆய்வாளா் தயாளன் தலைமையில் பொன்னை கூட்டு ரோட்டில் போலீஸாா் சாலைகளில் தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வேகமாக வந்த காரை மடக்கி பிடித்தனா். காரை விரட்டி வந்த ஐஜி தனிப்படை போலீஸாரும் காரில் இருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் பொன்னையை சோ்ந்த சசி கணேஷ்(26), ஆனந்தராஜ் (25) என்பது தெரிய வந்தது. காரை சோதனை செய்தபோது 200 கிலோ குட்கா பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து காா் உள்பட 200 குட்கா பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.