மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வேலூா்: நவ.21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.21) நடைபெற உள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2025, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.21) நடைபெற உள்ளது.

இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.21) காலை 10 மணிக்கு மாவட்டஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்பொறியியல், வேளாண்வணிகம், விற்பனை துறை, கூட்டுறவுத்துறை, நீா்வள துறை, வனத்துறை, மாசுக்கட்டுப்பாடுவாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா். மேலும், கடந்த மாதம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனா்.

எனவே, வேலூா் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.