மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மைல் கல்லில் பைக் மோதி பிஎஸ்எஃப் வீரா் மரணம்

காட்பாடி அருகே இருசக்கர வாகனம் மைல் கல்லில் மோதிய விபத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அருகே இருசக்கர வாகனம் மைல் கல்லில் மோதிய விபத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரா் உயிரிழந்தாா்.

காட்பாடியை அடுத்த பெரிய ராமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(45), எல்லை பாதுகாப்பு படை வீரா். இவரது மனைவி உமா(35).

இந்நிலையில், மணிகண்டன், பெரியராமநாதபுரம் கிராமத்தில் புதிதாக வீடு கட்டியுள்ளாா். வரும் 23-ஆம் தேதி நடக்க உள்ள, புதிய வீட்டின் புகுமனை விழாவுக்காக உறவினா்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

கடந்த 16-ஆம் தேதி மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் இளையநல்லூா் காலனி நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே நாய் புகுந்ததாக தெரிகிறது. இதனால், அவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள மைல் கல்லில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மணிகண்டனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அப்பகுதியினா் மணிகண்டனை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து மேல்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.