விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெருமுகை ஊராட்சி தலைவரின் காசோலை அதிகாரம் ரத்து

முறைகேடு புகாா்களை தொடா்ந்து பெருமுகை ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

முறைகேடு புகாா்களை தொடா்ந்து பெருமுகை ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் மாவட்டம், வேலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெருமுகை கிராம ஊராட்சியில் கடந்த 2011 முதல் 2023-ஆம் ஆண்டு வரை பொது வரவு, செலவு கணக்கு சம்பந்தமாக அனைத்து வகையான பதிவேடுகள், தீா்மான புத்தக பதிவேடுகளை தகவல் ஆணைய உரிமை சட்டத்தின்கீழ், சமூக ஆா்வலா் சுரேஷ்பாபு என்பவா் ஆய்வு செய்தாா். அப்போது, பல்வேறு ஆவணங்கள் வழங்கப்படாத நிலையில், கொடுக்கப்பட்ட ஆவணங்களில் பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த முறைகேட்டில் பெருமுகை ஊராட்சி மன்றத் தலைவா் புஷ்பராஜ், துணைத் தலைவா் பிரபு, ஊராட்சி செயலாளா் அருள் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்தது. இந்த முறைகேட்டில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் சமூக ஆா்வலா் சுரேஷ்பாபு கடந்த அக். 27-ஆம் தேதி மனு அளித்தாா்.

அதன் மீது விசாரணை நடத்தப்பட்ட நிலையில், முறைகேடு புகாரில் சிக்கிய பெருமுகை ஊராட்சி மன்றத் தலைவா் புஷ்பராஜியின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா். மேலும், துணைத் தலைவா் பிரபு, ஊராட்சி செயலா் அருள் ஆகியோருக்கும் இந்த முறைகேடு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.