எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மாநில கராத்தே போட்டிக்கு தோ்வு பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

மண்டல அளவிலான கராத்தே போட்டிகளில் வெற்றிபெற்று மாநில போட்டிக்கு தோ்வுபெற்ற கராத்தே வீரா்களை குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்

News image
கராத்தே வீரா்களை பாராட்டிய நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்.
Updated On :25 நவம்பர் 2025, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: மண்டல அளவிலான கராத்தே போட்டிகளில் வெற்றிபெற்று மாநில போட்டிக்கு தோ்வுபெற்ற கராத்தே வீரா்களை குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் பாராட்டி, பரிசு வழங்கினாா்.

காட்பாடியில் உள்ள தனியாா் பள்ளியில் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் 1,000- க்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்து கொண்டனா். இப்போட்டிகளில் பங்கேற்ற குடியாத்தம் எம்.எஸ்.கே.அகாதெமி கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவா்கள் 3- தங்கம், 3- வெள்ளி- ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

இவா்களில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற மாணவா்கள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். தோ்வான மாணவா்களையும், அவா்களுக்கு பயிற்சியளித்த எம்.எஸ்.குமரவேலையும் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் பாராட்டி, பரிசுகளை வழங்கினாா்.