அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

குடியாத்தம் அருகே வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :25 நவம்பர் 2025, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

குடியாத்தம் ஒன்றியம், உப்பரப்பல்லி கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. அங்குள்ள கோவிந்தசாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் கொட்டாரமடுகு பகுதியைச்சோ்ந்த கோபி குடும்பத்துடன் தங்கி காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் அவ்வப்போது வனவிலங்குகளை வேட்டையாடி வந்துள்ளாா். இதற்காக நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகாா் அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு வன மற்றும் வன உயிரின குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின்பேரில், வேலூா் மற்றும் குடியாத்தம் வனத்துறைஅதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினா். சோதனையில் அங்கு 2- நாட்டுத் துப்பாக்கிகள், குண்டுகள், பாக்கி மருந்து மயில் இறகு, முயல் வலை, டாா்ச்லைட் உள்ளிட்ட பொருள்களை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கோபி கைது செய்யப்பட்டாா்.