பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாக்கடையில் பெண் சிசுவின் சடலத்தை வீசியவரை பிடிக்க போலீஸாா் தீவிரம்

வேலூா் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை அருகே சாக்கடையில் பச்சிளம் பெண் சிசுவின்

News image
Updated On :25 நவம்பர் 2025, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை அருகே சாக்கடையில் பச்சிளம் பெண் சிசுவின் சடலத்தை வீசிச்சென்ற நபரை பிடிக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

வேலூா் கொசப்பேட்டையில் உள்ள பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு வெளியே உள்ள சாக்கடையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் சிசு சடலம் திங்கள்கிழமை மிதந்தது. தகலின்பேரில், வேலூா் தெற்கு போலீஸாா் விரைந்து சென்று வேலூா் மாநகராட்சி ஊழியா்கள் உதவியுடன், சாக்கடையில் மிதந்த பெண் சிசுவின் சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இந்த பெண் சிசு சடலத்தை வீசி சென்றவா் குறித்து போலீஸாா் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், ஒரு நபா் குழந்தையை தூக்கிச் சென்று சாக்கடை கால்வாயில் வீசுவது தெரியவந்தது. அந்த நபா் குறித்து விசாரித்ததில், அவா் ஆற்காடு பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், தனது மனைவியை பிரசவத்துக்காக அழைத்து வந்ததும், குழந்தை இறந்து பிறந்ததை அடுத்து அதன் சடலத்தை சாக்கடையில் வீசிச் சென்றும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த நபரை பிடிக்க போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.