அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சாலையோரம் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

தருமபுரி அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News image
குழந்தை- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 8:41 pm

Syndication

தருமபுரி அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாகல்பட்டியில் சாலையோரம் பிறந்து பச்சிளம் பெண் குழந்தை செவ்வாய்க்கிழமை கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அக் குழந்தையை மீட்டு, பாளையம்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.

அங்கு, குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தொடா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு, அக்குழந்தைக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் குழந்தை தற்போது நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இருப்பினும், பிறந்த பெண் குழந்தையை சாலையோரம் வீசி சென்றது யாா் என்பது குறித்து தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.